Friday, July 20, 2012

விளம்பரங்கள்


இந்த வார டவுண்லோட் - மினி கால்குலேட்டர்

கம்ப்யூட்டரில் வேலை செய்து கொண்டிருக்கும்போது, திடீரென ஏதேனும் சிறிய கணக்குகளை மேற்கொள்ள வேண்டியதிருக்கும். இதற்கென எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் பார்முலா அமைத்து செயல்பட முடியாது. விண்டோஸ் தரும் கால்குலேட்டரையும் ஸ்டார்ட், ஆல் புரோகிராம்ஸ், அக்சசரீஸ், கால்குலேட்டர் எனச் சென்று கிளிக் செய்திட வேண்டும். விண்டோஸ் தரும் இந்த கால்குலேட்டரை அதன் தோற்றத்திற்காக, தெளிவாகத் தெரியாத தன்மைக்காகப் பலர் விரும்புவதில்லை. டெஸ்க்டாப்பில் ஒரு கால்குலேட்டர் இருந்தால், அதுவும் வசதியாகவும், எளிமையாகவும் பயன்படுத்தும் வகையில் இருந்தால் நன்றாக இருக்குமே. அப்படி ஒரு கால்குலேட்டரைத்தான், மினி கால்குலேட்டர் என்ற பெயரில், இணைய தளம் ஒன்று

அசட்டு தைரியத்துடன் அணுகாதீர்


ஜிமெயில், குரோம் பிரவுசர், யுட்யூப், கூகுளின் தேடல் சாதனம் என கூகுள் சாதனத்தைப் பயன்படுத்தி இணையத்தில் உலா வருகையில், நாம் பார்க்க விரும்பும் இணைய தளத்தில் நம்மை செயல் இழக்கச் செய்திடும், அல்லது மோசமான விளைவுகளைத் தரும் புரோகிராம்கள் கொண்ட இணைய தளங்கள் இருப்பின், உடனே அது குறித்து எச்சரிக்கை ஒன்றை கூகுள் தருகிறது. குறிப்பிட்ட தளத்தினைத் திறக்காமல் நம்மைக் காப்பாற்றுகிறது. இது போல நாள் ஒன்றில் ஏறத்தாழ 9,500 தளங்களைக் கண்டறிவதாக, கூகுள் தன் வலைமனையில் (http://googleonline security.blogspot.com/2012/06/safebrowsingprotectingwebusersfor.html ) தெரிவித்துள்ளது.
இது மட்டுமின்றி, நாள் ஒன்றில், கூகுள் ஏறத்தாழ ஒரு கோடி அல்லது 1.2 கோடி தேடல்களுக்குப் பதில் அளிக்கிறது. பதிலாகப் பட்டியலிடப்படும் தளங்களில், மால்வேர்களால் பாதிக்கப்பட்ட தளங்களும்

விளம்பரங்கள்


சீருடை பணியாளர் தேர்வு முடிவுகள் 2012

Monday, July 16, 2012

அன்பு.நெட்: அன்பு தமிழர்களே- உங்களுக்கு ஒரு வேண்டுகோள்!

அன்பு.நெட்: அன்பு தமிழர்களே- உங்களுக்கு ஒரு வேண்டுகோள்!:      நம் தமிழ்நாடு 1953 வரை ஆந்திரம், கருநாடகம், கேரளம் ஆகிய மூன்று மாநிலங்களும் இணைந்து, "சென்னை தலைமாநிலம் என்ற பெயருடன் இருந்தது.  ஆந்தி...

அன்பு.நெட்: படித்ததில் பிடித்தது

அன்பு.நெட்: படித்ததில் பிடித்தது: எதிரிகளை மன்னித்து விடுங்கள் ஆனால் அவர்களை மறந்து விடாதீர்கள் .  

அன்பு.நெட்: பரவிவரும் புதிய வைரஸ்

அன்பு.நெட்: பரவிவரும் புதிய வைரஸ்: கூகுள், நாசா,டிஸ்னி, கோகா கோலா போன்ற மிகப் பெரிய பாதுகாப்பான நிறுவனங்களை எல்லாம் பாதித்த வைரஸ் ஒன்று இப்போது உலகெங்கும் பரவி வருகிறது. “Here...

அன்பு.நெட்: நாள் ஒன்றுக்கு லட்சம் முறை துடிக்கும் இதயம்

அன்பு.நெட்: நாள் ஒன்றுக்கு லட்சம் முறை துடிக்கும் இதயம்:                                                                                                                                             ...

Saturday, July 14, 2012

ஆன்லைன் பேங்கிங் நன்மைகளும் குறைகளும்

தற்போது நாட்டுடைமை யாக்கப்பட்ட வங்கிகள் மட்டுமின்றி தனியார் ஷெட்யூல் வங்கிகளும் ஆன்லைன் பேங்கிங் எனப்படும் இன்டர் நெட் வழி வங்கி நிதி பரிமாற்ற வசதிகளை அளித்து வருகின்றன. இந்த வசதியை கம்ப்யூட்டர் பேங்கிங், இன்டர்நெட் பேங்கிங், பி.சி. பேங்கிங் மற்றும் ஹோம் பேங்கிங் எனவும் அழைக்கின்றனர். பல வாசகர்கள் இந்த வசதியினை நாம் நம் கம்ப்யூட்டர் மூலம் பயன்படுத்துவதில் பிரச்னை ஏதும் உள்ளதா என்று கேட்டு கடிதங்களை எழுதி உள்ளனர். இதில் உள்ள நல்லதுகளையும் அல்லதுகளையும் இங்கு பார்க்கலாம். 

நன்மைகள்:

1. ஆன்லைன் பேங்கிங் முறையில் மிகப் பெரிய நன்மை ஒன்று உண்டென்றால் அது நேரத்தை மிச்சம் செய்வதுதான். நீங்கள் உங்கள் பணத்தைக் கையாளும் விதம் குறித்து எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. ஆனால் வங்கி சென்று செக்குகளை எழுதி படிவங்களை நிரப்பும் வேலையையும் அதில் செலவழிக்கும் நேரத்தையும் மிச்சப்படுத்துகிறது. அது மட்டுமின்றி ஒரு பரிமாற்றத்திற்கான நேரத்தையும் வெகுவாகக் குறைக்கிறது. சில வேளைகளில் ஒரு ஏ.டி.எம். மையத்தில் பணம் கையாளுவதைக்

இன்று காமராஜரின் 109வது பிறந்த நாள்


இன்று கல்விக் கண் திறந்த காமராஜர் பிறந்த தினம். இவரது காலத்தில் தான், கல்வியில் தமிழகம் அபார வளர்ச்சி பெற்றது.காமராஜர், விருதுநகரில் 1903ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி பிறந்தார். இவரது பெற்றோர் குமாரசாமி நாடார், சிவகாமி அம்மாள். காமராஜருக்கு ஆறு வயது இருக்கும் போது தந்தை காலமானார். இதனால் பள்ளிப் படிப்பை ஆறாம் வகுப்போடு முடித்தார். தாயின் அரவணைப்பில் வளர்ந்த அவருக்கு, சுதந்திர போராட்டத்தில் ஆர்வம் ஏற்பட்டது.
சுதந்திர போராட்ட வீரர்: 16வது வயதில் காங்கிரசில் சேர்ந்தார். ஆங்கிலேயரின் அடக்குமுறையை எதிர்த்து, சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார். 1930ம் ஆண்டு வேதாரண்யத்தில், ராஜாஜியின் தலைமையில் உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டார். கோல்கட்டா, அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். பல்வேறு

சர்வதேச சிலை கடத்தல் மன்னன் கைது


 ஜெர்மனியிலிருந்து அழைத்து வரப்பட்ட, சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூர், நேற்று, அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.கொள்ளைஅரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே ஜெமீன் சுத்தமல்லி கிராமத்தில் உள்ள, வரதராஜ பெருமாள் கோவில் பூட்டை உடைத்து, அங்கிருந்த வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி உள்ளிட்ட, 18 ஐம்பொன் சிலைகள், 2008 மார்ச், 13ம் தேதி, கொள்ளையடிக்கப்பட்டன.விக்கிரமங்கலம் அருகே ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவிலில் இருந்த, சுவாமி, அம்பாள், விநாயகர், முருகன், நடராஜர் உள்ளிட்ட எட்டு ஐம்பொன் சிலைகள், 2008 மார்ச், 21ம் தேதி, கொள்ளையடிக்கப்பட்டன.ஜெமீன் சுத்தமல்லி, ஸ்ரீபுரந்தான் கோயில், ஐம்பொன் விக்ரகங்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, உடையார்பாளையம் மற்றும் விக்கிரமங்கலம் போலீசார் தொடர்ந்த வழக்கு, சென்னையிலுள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டது.சிலை கடத்தல் பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், விருதுநகர் பார்த்திபன், மதுரை ஸ்ரீராம், விழுப்புரம் மாரிசாமி, ராஜபாளையம் பிச்சைமணி, சென்னையைச் சேர்ந்த பாக்கியகுமார் உள்ளிட்டோரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து, எட்டு ஐம்பொன் சிலைகளை மீட்டனர்.விற்பனைஅவர்களிடம்

B.V.Sc Revised Rank List

TNPSC VAO EXAMES 2012

TNPSC VAO EXAMES 2012 ONLINE APPLICATION CLICK HEAR .
LAST DATE 10/08/2012.
Name of the post: Village Administrative Officer
No of position: 1870 jobs 

Applicant be ensure his/her age should be between  21 years to 30 years (Unreserved candidates) and 21 years to 40 years (Reserved category candidates). If you need any clarification or want to clear any doubt related to age limit and relaxation please log on to the official website and read full advertisement.

Minimum SSLC or its equivalent academic qualification required for VAO exam. If applicant having higher qualification, will be eligible only if he/she has SSLC or its equivalent qualification. 

பயனுள்ள இணையதளங்கள்

இந்த தளங்கள் அனைவருக்கும் பல விதங்களில் பயன்தரும் தளங்களாகும்.
www.photonhead.com டிஜிட்டல் கேமரா வாங்கிப் பயன்படுத்தாத வாசகர்கள் மிகவும் குறைவு என்றே கூறலாம். எளிதாக சிறுவர்கள் கூட இவற்றைக் கையாளத் தொடங்கிவிட்டனர். ஆனால் முழுமையாக அதன் வசதிகளைப் பயன்படுத்துகின்றனரா என்றால், இல்லை என்றே கூற வேண்டும். டிஜிட்டல் கேமராவின் வசதிகள் என்ன? எதனைப் பயன்படுத்தினால் என்ன கிடைக்கும் என்று விலாவாரியாகத் தரும் தளம் இது. அபெர்ச்சர், ஸ்பீட், ரெட் ஐ எனப் பல விஷயங்கள் குறித்து இங்கு தகவல்கள் தரப்படுகின்றன. குழந்தைக்குச் சொல்லிக் கொடுப்பது போன்ற பல டுடோரியல்கள் உள்ளன. சிமுலேட்டர் முறையில் ஒரு கேமரா ஆன்லைனிலேயே தரப்பட்டு எப்படி இயக்குவது என்பதைச் சொல்லிக் கொடுக்கிறது. ஆனால் கொஞ்சம் பழமையானது போல சில விஷயங்கள் இருக்கின்றன. நவீன தொழில் நுட்பம் தான் எனக்கு வேண்டும் என எண்ணுபவர்கள்www.slrgear.com என்ற தளத்திற்குச் செல்லலாம். 
www.stopbadware.org இது பக்கத்துவீட்டு காவல்காரன் போல செயல்படுகிறது. ஏதேனும் மோசமான விளைவுகளைத் தருவதற்கென்றே உருவாக்கப்படும் தளங்கள் குறித்த தகவல்களைத் தருகிறது. இது போன்ற தளங்களால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து வரும் தகவல்களைத் திரட்டி அவற்றின் அடிப்படையில் மோசமான தளங்கள் மற்றும் புரோகிராம்களின் பட்டியலை அளிக்கிறது.
www.gmailtips.com: கூகுள் மெயில்பயன்படுத்துபவர்களுக்கான தகவல் களஞ்சியம். அதிகமான எண்ணிக்கையில் குறிப்புகள்,டிப்ஸ்

சிவப்பு நிறத்தை பார்த்தாலே வெறுப்பாக உள்ளது-யுவராஜ் சிங்


 புற்றுநோய் சிகிச்சையின் போது அதிகளவில் ரத்தத்தை பார்த்தேன். இதனால் தற்போது எனக்கு சிகப்பு நிறம் என்றாலே வெறுப்பாக உள்ளது என்று இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங்(30). கடந்த ஆண்டு(2011) இந்திய அணி உலக கோப்பையை கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்தவர். இவரது சிறப்பான ஆட்டத்தை பாராட்டி, உலக கோப்பையில் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
ஆனால் அதன்பிறகு நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட யுவராஜ் சிங், அமெரிக்காவில் சிகிச்சை பெற்று தற்போது குணமடைந்துள்ளார். இதனால் கடந்த ஒராண்டிற்கு மேலான கிரிக்கெட் போட்டிகளில் யுவராஜ் சிங் பங்கேற்க முடியவில்லை.
இந்த நிலையில் இலங்கையில் வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள உலக கோப்பை டுவென்டி20 உலக கோப்பை தொடரில் கலந்து கொள்ளும் வகையில், கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
யுவராஜ் சிங்கிற்கு சிகப்பு நிறம் தான் மிகவும் பிடித்த நிறம். ஆனால் தனது புற்றுநோய் பாதிப்பிற்கு பிறகு, சிகப்பு நிறம் என்றாலே வெறுப்பாகிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
சிகப்பு நிறம் தான் எனக்கு பிடித்த நிறமாக இருந்தது. ஆனால் எனக்கு புற்றுநோய் சிகிச்சையின் போது, அதிகளவிலான ரத்தத்தை பார்த்தேன். இதனால் தற்போது

பைல் வகைகள்

கம்ப்யூட்டரில் பலவகை பைல்கள் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. ஒரு சிலவற்றையே நாம் அடிக்கடி பயன்படுத்துகிறோம். இதனால் தான் நம் நண்பர்கள் இமெயில் மூலமாக ஏதேனும் ஒரு பைல் அனுப்புகையிலும் வெப் தளங்களில் இருந்து ஒரு பைலை இறக்கிய சூழ்நிலையிலும் அந்த பைல் வகை என்ன? அது எதற்குப் பயன்படுகிறது? எந்த அப்ளிகேஷனில் அவற்றைத் திறந்து பயன்படுத்தலாம் போன்ற கேள்விகளுக்குப் பதில் இன்றி தேடுகிறோம். இங்கு சில முக்கிய பைல் வகைகள் அவற்றின் துணைப் பெயர்களுடன் தரப்படுகின்றன. பொதுவாக அவற்றைத் திறக்கும் அப்ளிகேஷன் பெயரும் உடன் தரப்படுகிறது.
.bmp பட பைல். பெயின்ட் மற்றும் அடோப் போட்டோ ஷாப் போன்ற படங்களைக் கையாளும் அப்ளிகேஷன்களில் திறந்து பயன்படுத்தலாம். 
.dat டேட்டா அடங்கிய தகவல் பைல். டேட்டாவினைக் கையாளும் எந்த ஒரு அப்ளிகேஷனிலும் இதனைத் திறக்கலாம். 
.doc டாகுமென்ட் பைல். வேர்ட் தொகுப்பில் திறந்து பயன்படுத்தலாம். 
.exe எக்ஸிகியூட்டபிள் பைல். புரோகிராம் ஒன்றின் முதன்மையான பைல். இதில் டபுள் கிளிக் செய்தால் அந்த புரோகிராம் இயங்கும். 
.gif பட பைல். பெயின்ட் மற்றும் அடோப் போட்டோ ஷாப் போன்ற

கம்ப்யூட்டர் பிரச்னைகளும் காரணங்களும்


கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் அது இயங்கத் தொடங்கும் முன்பாகவே கம்ப்யூட்டர் முடங்கிப் போகலாம். ஆனால் முடங்கிப் போவது அனைத்து நேரங்களிலும் நடக்காது. இங்கு சில வழக்கமான எர்ரர் செய்திகளும், அவற்றிற்கான காரணங்களும் இங்கு தரப்படுகின்றன.
1. மானிட்டரின் எல்.இ.டி. விளக்கு விட்டு விட்டு எரிகிறது: இதற்குக் காரணம் எங்கேனும் இணைப்பு விட்டுப் போய் இருக்கலாம். மானிட்டர் கேபிள், டேட்டா கேபிள், ராம் மெமரி, டிஸ்பிளே கார்ட் மற்றும் சிபியு தொடர்புகளில் பிரச்சினை இருக்கலாம். மேலே கூறிய அனைத்தையும் சரி பார்க்கவும்.
2. தொடர்ந்து மூன்று பீப் ஒலி கேட்கிறது: ராம் மெமரி சிப் தொடர்பில் கோளாறு இருக்கலாம். எனவே அவை சரியாக அதன் ஸ்லாட்டில் பொருந்தியுள்ளனவா எனப் பார்க்கவும். மற்ற பிரிவுகளைச் சோதனை செய்கையில் இவை சற்று இடம் பெயர்ந்திருக்கலாம்.
3. மூன்று பீப் ஒன்று நீளமாக, இரண்டு குறைவாக: இந்த ஒலி கிடைத்தால் டிஸ்பிளே கார்டில் பிரச்னை. இந்த கார்டை ஒரு முறை எடுத்து திரும்ப பொருத்தவும். பிரச்னை தொடர்ந்தால் இதனை மாற்ற

டியூக் 200 சக்ஸஸ்.. புதிய சூப்பர் பைக்


கேடிஎம் பிராண்டில் அதிக சக்தி கொண்ட புதிய ஸ்போர்ட்ஸ் பைக் மாடல்களை விற்பனைக்கு கொண்டு வர பஜாஜ் ஆட்டோ திட்டமிட்டுள்ளது.
கடந்த பிப்ரவரியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட கேடிஎம் டியூக் 200 பைக் விற்பனையில் நல்ல முன்னேற்றம் கணடு வருகிறது. மாதத்திற்கு 1000 பைக்குகள் விற்பனையாகிறது.
இதனால், உற்சாகமடைந்துள்ள பஜாஜ் ஆட்டோ தற்போது ருசி கண்ட பூனையாக கேடிஎம் பிராண்டில் மேலும் புதிய மாடல்களை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
டியூக் வரிசையில் 125சிசி மற்றும் 375சிசி பைக்குகளை விற்பனைக்கு கொண்டு வர அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த இரு பைக் மாடல்களும் ஏற்கனவே ஐரோப்பிய மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்தியாவில் சில மாற்றங்களை மட்டும் செய்து உடனடியாக விற்பனைக்கு கொண்டு வர முடியும். படத்தில் நீங்கள் பார்ப்பது கேடிஎம் பிராண்டின் 1000சிசி சூப்பர் பைக். இந்த பைக்கும் பஜாஜ் பட்டியலில் இருக்கிறதாம்.
மேலும், தற்போது கேடிஎம் பிராண்டுக்கென தனி ஷோரூம்களை பஜாஜ் அமைத்து வருகிறது. இதன் மூலம் கேடிஎம் பைக்குகளுக்கு நிறைவான சர்வீஸ் மற்றும் வாடிக்கையாளர் சேவையை வழங்க முடியும் என்பதால் நிச்சயம் விற்பனையில் நல்ல வளர்ச்சியை பதிவு செய்ய முடியும் என்று பஜாஜ் நம்புகிறது.(thanks thatstamil.com)

சோலார் வசதி கொண்ட சார்ஜருடன் புதிய பட்ஜெட் மொபைல்!


எக்ஸ்-259 சோலார் என்ற பட்ஜெட் விலை கொண்ட மொபைல் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மொபைல் குறைந்த விலை கொண்டதாக இருப்பினும் சிறந்த தொழில் நுட்பங்களை வழங்கும்.
இதில் 2.4 இஞ்ச் திரை வசதியினை பெற முடியும். இதன் கியூவிஜிஏ தொழில் நுட்ப திரையின் மூலம் தெளிவான தகவல்களை பெறலாம். சிறிய திரையாக இருப்பினும் இதில் திரை 240 X 320 துல்லியத்தினையும் பெறலாம்.
டியூவல் சிம் நெட்வொர்க் வசதிக்கு சப்போர்ட் செய்யும் இந்த மொபைலில் இன்னும் ஒரு கூடுதல் வசதியும் உள்ளது.
இந்த மொபைலில் உள்ள பேனல் சோலார் சார்ஜிங் வசதி கொண்டது.
சூரிய ஒளி மூலம் சார்ஜ் செய்யப்படும் இந்த மொபைல் கிராமப்புரங்களில் உள்ள மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இப்போது அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதால், சூரிய ஒளி மூலம் சார்ஜ் செய்யப்படும் இந்த மொபைலின் பேனல் மிக சிறப்பான வசதியை வழங்கும்.
3 மணி நேரம் சூரிய ஒளியில் சார்ஜ் செய்தால், 1.5 மணி நேரம் டாக் டைம் கிடைக்கும். மேலும் இந்த மொபைலில் விஜிஏ கேமரா, புளூடூத், ஜிபிஆர்எஸ் போன்ற தொழில் நுட்ப வசதிகளும் கிடைக்கும். இத்தனை வசதி கொண்ட இந்த  மொபைலை ரூ. 2,499 விலையில் பெறலாம்.(thanks thatstamil.com)

பிரட் லீ "குட்பை'


 புயல் வேகப்பந்துவீச்சாளரான பிரட் லீ, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார். 13 ஆண்டு காலமாக அசைக்க முடியாத வீரராக இருந்த இவரது ஓய்வு, ஆஸ்திரேலிய அணியில் மிகப் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. 
ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ, 35. இதுவரை 76 டெஸ்ட் (310 விக்.,), 221 ஒருநாள் (380 விக்.,) மற்றும் 25 "டுவென்டி-20' (28 விக்.,) போட்டிகளில் பங்கேற்றுள்ளார். கடந்த 1999ல் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இவர், பெரும்பாலும் காயத்தால் அவதிப்பட்டார். 
கணுக்கால் காயம், முதுகு வலி, வயிற்று வலி, முழங்கால் காயம், மற்றும் பாதத்தில் பிரச்னை என, அவ்வப்போது அவதிப்பட்டு வந்த பிரட் லீ, கடந்த 2010ல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.
ஒருநாள் மற்றும் "டுவென்டி-20' போட்டிகளில் மட்டும் பங்கேற்று வந்தார். தற்போது இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றிருந்தார். நான்காவது ஒருநாள் போட்டியின் போது, வலது கெண்டைக்கால் சதையில் வலி ஏற்பட, நாடு திரும்பினார். விரைவில், "டுவென்டி-20' உலக கோப்பை தொடர் துவங்கவுள்ள நிலையில், நேற்று திடீரென ஓய்வை அறிவித்தார். பாண்டிங் ஓய்வுக்கு பின், ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி திணறி வருகிறது. இப்போது பிரட் லீயும் "குட்பை' சொல்லி இருப்பது, பேரிடியாக அமைந்துள்ளது. 
ஓய்வு குறித்து பிரட் லீ கூறியது:
கிரிக்கெட் வீரர்களுக்கு எப்போது காயம் ஏற்படுகிறதோ அல்லது காயம் தொல்லையாக உள்ளதோ, அன்று முதல் கடின காலம் தான். இங்கிலாந்தில் இருந்து திரும்பிய பின் ஓய்வு குறித்து யோசித்துக் கொண்டிருந்தேன். 
ஏனெனில், காயமடைந்த நிலையில், அடுத்த இரு மாதங்களுக்கு தொடர விருப்பம் இல்லை. உடற்தகுதி மற்றும் மன ரீதியாக 100 சதவீதம் வெற்றிக்கு உதவ முடிந்தால் மட்டுமே அணியில் இருக்க வேண்டும். இல்லையெனில், அது அணயின் நலனுக்கு உகந்தது அல்ல. 
சரியான தருணம்:
இப்படிப்பட்ட, மனநிலையில் தொடர்ந்தால், அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட முடியாது. ஏதாவது ஒருநிலையில் போதும் என்று எப்போது தோன்றுகிறதோ, அப்போது உடனே முடிவெடுத்து விட வேண்டும். "டுவென்டி-20' உலக கோப்பை தொடருக்குப் பின், விடைபெறலாமா என்பது குறித்து தேர்வாளர்களுடன் விவாதித்தேன். பின், ஓய்வு பெற இதுதான்  சரியான தருணம் என்பதால் இம்முடிவை அறிவித்தேன். 
கிளார்க் சரிதான்:
ஆஸ்திரேலிய அணியின் தற்போதைய கேப்டன் மைக்கேல் கிளார்க் திறமையானவர். அணியை சிறப்பாக வழிநடத்திச் செல்லும் இவருக்கு, நல்ல அனுபவம் உள்ளது. இவருக்கும், மற்ற வீரர்களுக்கும் ஆதரவளிக்க வேண்டும். ஏனெனில், ஒரே இரவில் யாரும் "சூப்பர் ஸ்டார்களை' உருவாக்கிவிட முடியாது. 
ஐ.பி.எல்., தொடரும்:
முதல் போட்டியிலேயே சதம் அடிக்க வேண்டும், 5 விக்கெட் வீழ்த்த வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. தற்போதுள்ள வீரர்களுக்கு பல்வேறு வழிகளில் இருந்தும் நெருக்கடி வருகிறது. சிறந்த ஆலோசனைகள் மூலம், தரமான வீரர்களை உருவாக்கலாம். கிரிக்கெட் அனுபவங்களில் இருந்து முற்றிலும் விலகிக் கொள்ள விரும்பவில்லை. இதனால், ஐ.பி.எல்., மற்றும் "பிக் பாஷ்' போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்பேன்.
இவ்வாறு பிரட் லீ கூறினார்.
"இரண்டாவது இன்னிங்ஸ்'
கிரிக்கெட் வாழ்க்கை குறித்து பிரட் லீ கூறுகையில்,"" வார்ன், மெக்ராத், கில்கிறிஸ்ட், ஸ்டீவ் வாக், மார்க் வாக் ஆகியோருடன் விளையாடிய காலங்கள் மறக்க முடியாதவை. இப்போது எனது வாழ்க்கையில் இரண்டாவது பாதி துவங்குகிறது. இது பெரும் எதிர்பார்ப்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இனி, விடுமுறை நாட்களில் வீட்டில் தான் இருப்பேன்,''என்றார்.
நழுவிய சாதனை
அதிக விக்கெட் வீழ்த்திய ஆஸ்திரேலிய பவுலர்கள் வரிசையில் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத், 250 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று 381 விக்கெட் வீழ்த்தி, முதலிடத்தில் உள்ளார். இதைத் தகர்க்க, பிரட் லீக்கு (221 ஒருநாள் போட்டி, 380 விக்.,) 2 விக்கெட் மட்டுமே தேவைப்பட்டது. இந்நிலையில் திடீரென ஓய்வை அறிவித்ததால், இச்சாதனை நழுவியது.
* ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் பிரட் லீ ஏழாவது இடத்தில் உள்ளார்.
பத்தாவது சிறந்த வீரர்
சர்வதேச டெஸ்ட், ஒருநாள் மற்றும் "டுவென்டி-20' என, மூன்று வித போட்டிகளையும் சேர்த்து, அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் பிரட் லீ, பத்தாவது சிறந்த வீரர் (718 விக்.,) என்ற பெருமை பெற்றுள்ளார். முதல் மூன்று இடங்களில் இலங்கையின் முரளிதரன் (1347 விக்.,), ஆஸ்திரேலியாவின் வார்ன் (1001), இந்தியாவின் கும்ளே (956) உள்ளனர். 
புன்னகையில் விழும் விக்கெட்
பிரட் லீக்கு என்று ஒரு "ஸ்டைல்' <உண்டு. தனது பந்தில் எதிரணி வீரர்கள் பவுண்டரி, சிக்சர் அடித்தால், அவர்களை முகத்தை நேராக பார்த்து வெறுப்பேற்றி புன்னகை செய்வார். அடுத்து சரியான அளவில் பந்துவீசி, "அவுட்' செய்வார். விக்கெட் எடுத்தவுடன் அப்படியே அந்தரத்தில் பறந்து, ஒரு காலை உயர்த்தி மற்றொரு காலால் தொட்டு மகிழ்வது இவரது "ஸ்டைல்'.
இந்தியா மீது நேசம்
இந்தியாவை இரண்டாவது தாய்வீடாக பிரட் லீ எண்ணுகிறார். இங்கு நிறைய பொருட்களுக்கு விளம்பர "மாடலாக' உள்ளார். பிரபல பாடகி ஆஷா போன்ஸ்லேவுடன் சேர்ந்து பாடியுள்ளார். 2007ல் "மியுசிக்' என்ற அறக்கட்டளையை இந்தியாவில் துவக்கினார். வசதி குறைந்த இளைஞர்களின் இசை வளர்ச்சிக்கு உதவுவது தான், இந்த அமைப்பின் நோக்கம். 2008ல் "விக்டரி' என்ற கிரிக்கெட் தொடர்பான, இந்தி படத்திலும் சிறிய வேடத்தில் நடித்துள்ளார். ஐ.பி.எல்., போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். (thanks Dinamalar)

Friday, July 13, 2012

ஒரு இனிய உதயம் .....




      நமது  விக்கிரமங்கலத்திலிருந்து     இன்று முதல்  இந்த வலைப்பக்கம் துவங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறோம் .              இந்த  பக்கத்தில்   தங்களுக்கு  தேவையான மற்றும்  உபயோகமுள்ள  அணைத்து  செய்திகளும்  இடம்பெறும் .
வேலைவாய்ப்பு  செய்திகள் , செய்தித்தாள்  செய்திகள் , கணினி சம்பந்தப்பட்ட உபயோகமுள்ள  செய்திகள் ,   விளையாட்டு  செய்திகள் , உள்ளூர்  செய்திகள்  அனைத்தும் இடம்  பெரும் . தினம்தோறும் ஒரு முறை  வருகை  தந்து  இந்த  வலைபக்கத்தை  பயனுள்ளதாக்க  உதவுமாறு  கேட்டுகொள்கிறேன் .